Tag: நோய்களினால்
Posted in இலங்கை செய்திகள்
நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/10/2022 Leave a Comment on நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்
நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்
நீண்டகாலமாக பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழிகாட்டல் நூல் இன்று (11) காலை கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
நோய் நிவாரணம், சிகிச்சை, புனர்வாழ்வளிப்பு, நோயாளர்களின் மனநலம் மற்றும் ஆன்மீக மேம்பாடு என்பனவற்றுக்கான வழிகாட்டல்களை உள்ளடக்கியதாக, இது
அமைந்துள்ளது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் திருமதி லக்ஷ்மி சேமதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதார சேவை பிரிவும் இலங்கை நிவாரண சேவை ஆய்வு நிலையமும் இணைந்து நூலை தொகுத்துள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனம் வளவாளர் பங்களிப்பை வழங்கியுள்ளது.












