மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பஸ் விபத்துச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

குறித்த விபத்துச் சம்பவத்தில் சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்