500 000 தென்னை மரக்கன்றுகளை விநியோம்
Posted in இலங்கை செய்திகள்

500 000 தென்னை மரக்கன்றுகளை விநியோம்

500 000 தென்னை மரக்கன்றுகளை விநியோம்

500 000 தென்னை மரக்கன்றுகளை விநியோம் ,வறுமையைக் குறைத்து நாடு முழுவதும் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், வீட்டுத் தோட்ட

சாகுபடிக்காக 500,000 தென்னை மரக்கன்று

சாகுபடிக்காக 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் தேசிய திட்டம் இன்று (09) காலை அம்பாறை, உஹனவில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், வடக்கு தென்னை முக்கோணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும்

வவுனியா தவிர, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 250,000 பயனாளி குடும்பங்களுக்கு 500,000 தென்னை மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு

இந்த நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக

வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு

அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்

2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்

2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம் ,தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.

அதன்படி, கப்ருகா கடன் திட்டத்திற்கு இணையாக, இந்த கப்ருகா நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.

இவற்றில் ஒரு மில்லியன் மரங்கள் வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கு அருகில் நடப்படும் என்று சுனிமல் ஜயக்கொடி அத தெரணவிடம் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

நமது மண்ணில் தென்னை ஆறு மாத காலத்தில் காய்க்குமா என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த பதிவு பதில் தருகிறது

பல்லாண்டு பயிர்கள் அவை தமது கால எல்லை எட்டும் பொழுதே காய்க்கும் அதில் அதற்கு நாம என்ன செய்ய வேண்டும்

நமது மக்கள் தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா ..?அப்படி காய்க்க வைக்க நாம் என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்

தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா அல்லது இரண்டு வருடத்தில் காய்க்கும்
நிலை ஏற்படுமா என்றால் அது சாத்தியமாகாது

தென்னை விரைவாக காய்க்க என்ன செய்ய வேண்டும் ..?

ஆனால் தென்னை மரங்கள் அதன் இனங்களுக்கு ஏற்ப தமது வளர்ச்சி தருகின்றன ,
பிள்ளை போல தென்னை என்பார்கள் ,பிள்ளைகளை நாம் எவ்வாறு பராமரிக்கிறோமோ அவ்விதமே இதனையும் வளர்த்தால் நாம் அதே கால பகுதியில் பயனை பெற்று விட முடியும்

தென்னை பயிரிட முன் என்ன செய்ய வேண்டும் ..?

தென்னை பயிரிட முன் அதன் மண்ணை வளப்படுத்தி ஐந்தாண்டுக்கு தேவையான நிலத்தடி உரத்தை மண்ணுக்குள் புதைத்தால், பசிந்தாட் பசலை போல பதப்படுத்தி இடுகை செய்தால் மரம் அதிக வளர்ச்சியை பெற்று தரும்

அத்துடன் தென்னை மரத்தின் குழி பகுதியில் காய்ந்த புட்கள் அல்லது தென்னம் தும்புகளை இடுவதால் நீரின் ஈர பதத்தை வைத்து கொள்ளும் தென்னை மரம் பெருத்து வளர இது ஒரு காரணியாக அமையும்

நீர் பாசன வசதிகள் இல்லாதவர்கள் கூட இதன் மூலமான பராமரிப்பு பயனை ஏற்படுத்தும்

தென்னை மூன்று வருடத்தில் காய்க்குமா..?

தென்னை , மூன்று வருடத்தில் காய்க்குமா ஆம் ,தென்னை மரங்கள் உரிய முறைகள் மண் பராமரிப்பு செய்ய பட்டு அதன் வளர்ச்சிக்கு ஏற்ப நாம்

பசலை,நீர் மற்றும் மண் வளமாக்கும் செயல் திட்டங்களை முன்னக்கி செயல்படுத்தினால் தென்னை மூன்று வருடத்தில் காய்க்கும் நிலையை எட்டும்

அதற்கு தேவை தென்னை கன்றுகளுக்கு உரிய விடயங்கள் மேற்கொள்ளாது போனால் தென்னை கன்றுகள் ஐந்து வருடத்தில் காய்க்கும் நிலைக்கு சென்று விடும்

விரைவாக தென்னை வளர என்ன செய்ய வேண்டும் ..?

தென்னை மரத்தின் வேர்கள் அதிகம் இடம்பெறுகின்ற பொழுதே மரத்தின் வளர்ச்சி அதிமுகமாக இருக்கும்

தென்னை மரத்தின் வேரக்ள அதிகம் உருவாக இவை முக்கிய காரணியாக அமையும் ,வேர்கள் அதிக வளர்ச்சி கண்டாலே மரம் செழித்து வளரும் ,மரம் செழித்தாலே எமக்கு தேங்காய் கிடைக்கும் ,அதனால் வீட்டு வருமானம் பெருகும்

நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிக இலாபத்தை மேற்கொள்ளவும் தென்னைக்குள் ஊடு பயிர் செய்வது சாலை சிறந்தது ,

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தென்னையில் பயன் பெற்றிட முன்பு இரண்டு வருடத்திற்குள் நாம் அதிக இலாபத்தை ஊடு பயிர்கள் மூலம் பெற்று கொள்ள முடியும்

தென்னை அதிக இலாபம் தரும் தோட்டமுறை பயிர் ,மனம் சோர்ந்து போகாது தென்னை வளர்த்தல் ,பணத்தை அள்ள முடியும் .

  • வன்னி மைந்தன் –