மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை நேற்று (14) கைது செய்துள்ளனர்.

டிப்பரின் சக்கரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டிப்பர் வாகனம் பொலிஸாரை விபத்திற்குள்ளாக்க முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு

இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு

இரத்மலானை – ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு – லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.