Posted in Uncategorized

சகோதரனை அடித்து கொன்ற குடும்பம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

சகோதரனை அடித்து கொன்ற குடும்பம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

மினிபோ, ஹசலக, அத்தேஎல பகுதியில் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் இணைந்து தடியால் தாக்கியதில் 28 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இறந்தவரின் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் ஆகியோர் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுனில் நிஷங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.