Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

சொல்லி விடு

சொல்லி விடு …!

பூ மாலை வீதியில
புகழ் பாடி போகையில
மயிலாட்டம் நடப்பவரே
மா மனிதர் நீவீரா ..?

ஓட்டளித்த மக்கள் எல்லாம்
ஓலை குடில் வசிக்கையில
காணமல் போனவரே
கால் கடுக்கும் போவீரா

வீடழித்தான் பகை இணைந்து
விடு கதை அளப்பவரே
உன் வயிறு பசியடங்க
உணவளித்தார் மறந்தீரே

சிறையினிலே திருடர்களா ..?
சிரிப்புதான் வாயினிலே
கோடிகளை திருடி வைத்தார்
கேடிகளோ வெளியினிலே

குற்றங்கள் தடுக்கத்தான்
சட்டங்கள் இருக்கிறதா ..?
சட்டத்தை திருடி விற்றார்
சாக்கடையில் வீசலையா ..?

இது தானா உன் நாடு
இன்றிந்த சூடு காடு
என்று வரும் சுதந்திரமோ ..?
எவரெனும் சொல்லி விடு ..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 16-11-2021