தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைப்பு

தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைப்பு

எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இன்று (05) நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேனீர் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தேனீர் ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேனீர் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு

சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கொரனோவில் இருந்து தப்பிட – கொத்து உண்ண தடை

    கொரனோவில் இருந்து தப்பிட – கொத்து உண்ண தடை

    கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறு வேண்டுமாயின்

    கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை உண்பதைத் தவிர்க்குமாறு; வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சிலரது உடலில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்

    நுண்ணுயிரியல் பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலாவிகா தெரிவித்துள்ளார்.

    அத்துடன் மக்கள் தேகாரோக்கியத்துடனும் சுகாதார ஆரோக்கியமான

    உணவுகளையும் விற்றமின் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.