Tag: காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்
யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
Author: நலன் விரும்பி Published Date: 04/12/2020 Leave a Comment on யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன்இ வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல்
போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும்
சேதமடைந்துள்ளன. சண்டிலிப்பாய்இ சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன. இ இடம்பெயர்பவர்களைத் தங்கவைப்பதற்காக நான்கு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன






