காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லயன் கொள்ளையடித்த கும்பல் கைது
Posted in உலக செய்திகள்

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது

ஜேர்மனியில் டஜன் கணக்கான பண இயந்திரங்களை தகர்த்து ,
அதில் இருந்து 5.2 மில்லியன் யூரோக்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ,
ஒன்பது ஆண்கள் நெதர்லாந்து மற்றும் ,பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு நாடுகளில் உள்ள 16 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது,
இந்த மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிக்க பட்டனர் .

சந்தேகநபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும்,
நெதர்லாந்து அல்லது பெல்ஜியத்தில் வசிக்கும் டச்சு, மொராக்கோ, ஆப்கான்,
துருக்கி மற்றும் ருமேனிய பிரஜைகள் என குற்ற தடுப்பு பிரிவு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .