Tag: கமலா ஹாரிஸ்
நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ்
நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ்
நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ், என்கிறார் முன்னாள் துணை ஜனாதிபதி
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போருக்குள் ‘‘இழுக்கப்பட்டுள்ளார்’’ என்று முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறுகிறார்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பார்வையாளர்களிடம் கூறினார்: ‘‘அவர் ஒரு போரில் நுழைந்தார், பிபி
நெதன்யாகுவால் அதற்குள் இழுக்கப்பட்டார், அதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம் – அமெரிக்க மக்கள் விரும்பாத ஒரு போரில் நுழைந்துள்ளார், அமெரிக்கப் படைவீரர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.’’
இந்தச் செய்தி வெளியாகும் நேரத்தில், டிரம்ப் ஹாரிஸுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை, ஆனால் சமூக ஊடகப் பதிவில் இஸ்ரேல் ஒரு ‘‘சிறந்த கூட்டாளி’’ என்று கூறியுள்ளார். அந்தப் பதிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
‘‘மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் ஒரு சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளனர்.
அவர்கள் துணிச்சலானவர்கள், தைரியமானவர்கள், விசுவாசமானவர்கள், மற்றும் புத்திசாலிகள்.
இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது
மேலும், மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தைக் காட்டிய மற்றவர்களைப் போலல்லாமல்,
இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது, மேலும் எப்படி வெற்றி பெறுவது என்பதையும் அறிந்திருக்கிறது!’’
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு

- ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

- போருக்கு நாங்க தயார் ஈரான் இராணுவம்

- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு

- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை

- கப்பல் தாக்குதல் ஐநாவில் ஈரான் புகார்

- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவு

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு

இஸ்ரேல் போர் அமைச்சரை சந்திக்கும் கமலா ஹாரிஸ்
இஸ்ரேல் போர் அமைச்சரை சந்திக்கும் கமலா ஹாரிஸ்
இஸ்ரேல் போர் அமைச்சரை சந்தித்து அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முக்கிய பேச்சுக்களில்
ஈடுபடவுள்ளார் .
இந்த சந்திப்பின் பொழுதுமுக்கிய விடயங்கள் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இறுக்கமடையும் செங்கடல் கப்பல் போக்குவர்த்தல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதாரத்தில் அடி விழ ஆரம்பித்துள்ளது .
அதனால் போரை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை இஸ்ரேல் மதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
, அமெரிக்கா அதற்க்கு கட்டுப்பாட்டு வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது
அதனால் தான் அம்மணி ஓடி செல்கிறார் என்பதாக தெரிகிறது
கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்
கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியா வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை
வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.
ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்காக நான் அமெரிக்காவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள். அவர்கள் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ்
இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான மக்கள் தொடர்பு எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டறிக்கைக்குப் பிறகு வெள்ளை மாளிகை வளாகத்தில் உரையாடினர்.
இதையும் படியுங்கள்…அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா – கமலா ஹாரிஸ் பெருமிதம்











