கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை ,ஹோர்முஸில் உள்ள தனது படைகளுடன் அனைத்து கப்பல்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இல்லையெனில் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு ஈரான்

“ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் கைகளில் உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பான

பயணம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்” என்று ஈரான் இராணுவம் கூறியுள்ளது.

“ஹோர்முஸில் சிக்கியுள்ள கப்பல்களை வெளியே வழிநடத்துவதற்கான கடற்படை நடவடிக்கை குறித்த ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிர்வினையாகவே

ஈரான் ஊடகங்களில் வெளியான இந்த இராணுவ அறிக்கை தோன்றுகிறது. இந்த நடவடிக்கைகள் வரும் மணிநேரங்களில் தொடங்கப்பட உள்ளன.”

“எங்கள் முழு பலத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை நாங்கள் பராமரித்து நிர்வகிப்போம். மேலும், அனைத்து வர்த்தகக் கப்பல்கள் மற்றும்

எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பு

எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளின்

ஒருங்கிணைப்பு இல்லாமல் கடந்து செல்லும் எந்தவொரு செயலையும் தவிர்க்குமாறு நாங்கள் அறிவிக்கிறோம்,” என்று இராணுவம் கூறியது.

“எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படையும், குறிப்பாக ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட அமெரிக்க இராணுவம், ஹோர்முஸ் ஜலசந்தியை அணுகி நுழைய முயற்சித்தால், அவர்கள் தாக்கப்படுவார்கள் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.

ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்

ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்


ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம் என அறிவித்துள்ளதால் செங்கடல் பகுதியில் பதட்டமாகும் மத்திய தரை கடல்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வன்முறை இராணுவம் ,பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தாவிடின் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதிகள் மீளவும் மிரட்டல் விடுத்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலை நடத்திவருகிறது .

ஏமன் ஹவுதி போர் படை

அதனால் காசா மக்களுக்கு ஆதரவாக ஏமன் ஹவுதி போர் படைகள் களத்தில் இறங்கி ,கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

இஸ்ரேல் ,அமெரிக்கா,பிரிட்டன் ,நாட்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

அதனை அடுத்து தற்போது மீளவும் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் அறிவிப்பால் ,மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

ரபா எல்லை ஊடாக மிக பெரும் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .

அவ்வாறான நிலையில் ஏமன் ஹவுதி போர் படைகள் பகிரங்கமாக அறிவித்துள்ள செயலினால் ,மீளவும் செங்கடல் ,மத்திய தரைக்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட போவதை காண்பிக்கிறது .

வீடியோ