Tag: கண்ணீர் சமர்ப்பணம்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
கண்ணீர் சமர்ப்பணம் …..!
கண்ணீர் சமர்ப்பணம் …..!
நேற்றெங்கள் வீதியிலே
நீள் நடந்த நிலவு ..
பேச்சின்றி போனதுவோ ..?
பேர் இடி தந்துவே ….
கால் ஊன்றி நடக்கையில
கை பிடித்து சென்றவளே …
வேர் பிடித்து நாம் நிமிர
மோர் வாத்து நின்றவளே ….
உன் வலியை உளம் புதைத்து
உன்னை நீ வதைத்து …
எழுந்து நடந்தவளே
ஏற்றங்கள் கண்டவளே ….
வேரறுந்து வீழ்ந்தாயோ ..?
வேறாகி போனாயோ …?
பொங்கி வரும் கண்ணீரை – உன்
பொற்பாதம் தூவுகிறோம் …
கலகலத்த உன் பேச்சு
கனிவான உபசரிப்பு ….
நெஞ்சம் ஏறி நினைவு தூற
நெஞ்சே தீ தின்ன மறைந்தாயே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/05/2019
Home » கண்ணீர் சமர்ப்பணம்






