Tag: எம்.ஏ.சுமந்திரன்
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதற்குப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றது என மத்திய
குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனைப் பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார்.
வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரைக்கும் அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள்.
கடந்த காலத்தில் அரசமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசுக் கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது.
சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே. அது எங்களுடைய நிலைப்பாடு என்றார்
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து
தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி
விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற ஜனநாயக
போராட்டம் மே 9 ஆம் திகதிக்கு பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது.
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை
ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள்
மீது தாக்குதல் நடத்தினார்கள்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்துக்கு
எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது
டுவிட்டர் ஊடாக செய்தி வெளியிட்டார். ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது
செய்யப்படவில்லை.
காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள் என்பதை அனைவரும் நன்கு
அறிவார்கள்.
ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள். உண்மையை
மறைத்து விடுகிறார்கள்” என்றார்.








