என்னவனே 2
Posted in கவிதைகள்

என்னவனே 2

என்னவனே 2

மீண்டும் உனக்காக ..
மீட்டிட வா
இல்லையோ
மண்ணிட ஆவது வருவாயா..?

என் நாட்குறிப்பொன்றில்..
இருந்து உன்னால்
கசக்கப்பட்ட காகிதத்தில்
இருந்து..

உனக்காகவே
நின்மதி ..
சந்தோசம் ..
எல்லாத்தையும் இழந்தேன்
எல்லாரையும் இழந்தேன் ..
எதுகும் எனக்கு பெரிதாய் இல்லை
ஆனால்
உன்னை இழந்தது மட்டும்
எனக்கு பேரிழப்பாய் தெரிகிறது ..

எதற்க்காக ..
எதனால்..
உனக்கும் …எனக்கும்
இத்தனை இடைவெளிகள்..
இந்த இடைவெளியை
நான்
எதைக்கொண்டு நிரப்பிடுவேன்..

வார்த்தைகளை
அள்ளி கொட்டிய பின்னும்
அத்தனையும் மறந்து
எப்படி நான் உன்னிடம் பேச..?
இருந்தும் பேசுகிறேன்
வலிகளை மறந்து..

நீ நடந்த தடங்கள் அத்தனையும்
என் கண் முன் இருக்க
எப்படி இது என்று
நான் இருக்க ..
அது ஒன்னும் இல்லை

உன் வார்த்தைகளால்
என் நெஞ்சை
குத்தி கிழித்து
என் குருதியில்
நனைந்த
உன் கால்
தடங்கள் மட்டும்
எனக்கு மிச்சமாய்..

விடை தெரியாமல்
தவிக்கிறேன்..
விட்டுச் சென்றவன்
மேல் இத்தனை
காதலா என்று..!

சத்தம் இட்டு அழவேண்டும்
போல் இருக்கு..
ஆனால் என்னை
கட்டி அணைத்து
ஆறுதல் சொல்ல
நீ இல்லையே என்ற
வலி மட்டும்..

உன்னை நேசித்த
எனக்கு நீ கொடுத்த
மிகப்பெரிய பரிசு
உன் நினைவுகள் மட்டுமே..

வேண்டாம் என தூக்கி
எறிந்தவனே
உன் குரலை
ஒரு முறையாவது
கேக்க வேணும்
என்று என் மனசு துடிக்கிறது
ஒரு நிமிடம்
என்னை திட்டுவதற்காவது
பேசி விட மாட்டாயா..?

மீண்டும் வருவாயா
என்னிடம்..?

தொடரும் …22-05-20225 vanni mainthan tiktok poem