இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் கமாஸ் ,ஜிகாத் படைகள் அறிவித்துள்ளன.

ரொக்கட் ஏவுகணை தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியான ,ஆஸ்கோர்ட் மற்றும் அஸ்கோலன் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது.

காசா பகுதிகளில் மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையிலும், அந்த வாழ்விடங்களை, மீள ஆக்கிரமிக்க நோக்குடன் யூத படைகள் மீளவும் மண்

பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற காரணத்தினால், அதனை தடுக்கும் நடவடிக்கை பதிலடியாகவும் இந்த ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்போது கடுமையான தாக்குதல் இடம் பெற்று வருவதாகவும் ,மிக மிகப்பெரும் உக்கிரமான சமரொண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த ரொக்கட்

இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த இந்த ரொக்கட் , மற்றும் ஏவு கணையினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவரவில்லை.

தமக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யூத படைகள் இதுவரையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.