விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல
Posted in இலங்கை செய்திகள்

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல ,அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.

அதிலும் மிக குறிப்பாக தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி,கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும். இதுவே எமது

பிரதிநிதித்துவத்தை பெற்று கொள்ள உள்ள ஒரே வழி. இதைதான் விகிதாசார தேர்தல் முறையும் வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ​அவர்:

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி,கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் கடை பிடிக்க வேண்டிய செயன்முறைமையை நான் எளிமையாக விவரிக்க

விரும்புகிறேன். முதலில் நமது வாக்காளர்கள், தமது மாவட்டங்ளில் போட்டி இடும் தமிழ் வேட்பாளர்களில் வெற்றி பெறக்கூடிய அணி எது, அதன் சின்ன்னம் எது என தீர்மானிக்க வேண்டும்.

இதன் பின்னர், அந்த அணிக்குள்ளே இருக்கும் தமிழ் வேட்பாளரின் அல்லது வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை கண்டறிய வேண்டும். இதன் பின்னர் தேர்தலின் போது வாக்கு சீட்டில், தாம் தெரிவு செய்துள்ள

சின்னத்துக்கு புள்ளடி இட வேண்டும். பின்னர் தமிழ் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு புள்ளடி இட வேண்டும். இதோடு இந்த வாக்களிக்கும் கடமை முடிகிறது. என தெரிவித்தார்.

தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்த பின்னர் விருப்பு வாக்குகள் மீதமாக இருக்குமானால், அந்த விருப்பு வாக்கை அந்த அணியின்

தலைமை வேட்பாளருக்கு அளிக்கலாம். அளிக்காமலும் விடலாம். மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல.

முதலில், நாம் போட்டி இடும் தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடி இடுவது கட்டாயம். பின்னர் தமிழ் வேட்பாளரின் விருப்பு வாக்கை அளியுங்கள். கொழும்பில் மனோ கணேசன்-11, லோஷன்-13, கேகாலையில் பரணி-5,

இரத்தினபுரியில் சந்திரகுமார்-6, கம்பஹாவில் சசிகுமார்-18,கண்டியில் பாரத்-4, பதுளையில் பகிதரன்-4 ஆகிய விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு மாத்திரம் வாக்களித்து விட்டு வாக்களிக்கும் பணியை முடிவு செய்யலாம்.

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் இதுவே நமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய எம் முன் உள்ள ஒரே ஜனநாயக வழியாகும்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்
Posted in இலங்கை செய்திகள்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம் ,கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார,

மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தை தூண்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனவாதத்தினால் முழு நாடும் சீரழிந்து போனது. இனவாதத்தையும் மதவாதத்தையும், இனமத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வோம்.

அனைத்து இன மக்களும் இந்த மோசமான அரசாங்கத்தினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற, வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு

இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் துன்பத்தைத் துறந்து கண்ணீரைத் துடைத்து சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு 29 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஒரு பக்கத்திலிருந்து இன்னும் ஒரு பக்கத்திற்கு கட்சி மாறுகின்ற இந்த முறையை தடை செய்வோம்.

அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முடிவெடுக்கக் கூடிய வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வரப்பிரசாதங்களை வழங்கி நிபந்தனைகளுக்காக உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதில்லை. கொள்கையின் அடிப்படையிலே இணைத்துக் கொள்வோம்.

கிராமத்தையும் பின்னர் நகரத்தையும் பின்னர் நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்யும் கொள்கை திட்டத்துடனே நாம் செல்கின்றோம்.

காணியில்லாத வீடில்லாத மக்களுக்கு காணிகளை வழங்கி, வீடுகளை அமைத்துக் கொடுத்து கம்உதாவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு மலைநாட்டு தோட்டங்கள், கீழ்நாட்டு தோட்டங்கள், கிராமிய, நகர, நடுத்தர

வகுப்பு மக்கள், மற்றும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் உள்ளடக்கி, தேசிய வீடமைப்புக் கொள்கை ஒன்றை

உருவாக்கி, தமது சொந்த வீடுகளிலே வாழ்கின்ற உரிமையை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதோடு, 24 மாதங்களுக்கு ரூபா 20 ஆயிரம் விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கின்ற வேலை திட்டத்தை முன்னெடுக்கின்றோம். தொடர்ந்தும்

நிவாரணங்களைப் பெற்று அதிலேயே தங்கி வாழாத ஒரு பரம்பரையை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாக்கு வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வது மாத்திரம் அல்லாமல் QR முறையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை

போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை

வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.