இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள்

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடல் படை

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடல் படை

இந்தியா கச்சத்தீவு கடல் பரப்புக்குள் உள்ளே உள்ள எல்லையில் ,மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த, இந்திய மீனவர் படகை ,அத்துமீறி நுழைந்த சிங்கள கடல் படை சிறை பிடித்துள்ளது .

இந்தியா கடற்படைக்கு தகவல் வழங்க பட்டதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்திய கடல் படையினர் விசாரணைகளை நடத்தினர் .

அதன் பின்னர் குறித்த காங்கேயன் என்ற மீன்பிடி படகுடன் ,அதில் பயணித்தவர்கள் விடுவிக்க பட்டனர் .

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக,இந்தியா செயல் படும் என அறிவித்தது .

அதன் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பில் விலகி இருந்த மறு நாள் ,இந்த அத்து மீறலை சிங்கள கடற்படை மேற்கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.