Tag: அழைத்துச் சென்றவர் கைது
சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது
சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது
15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால் விசுவமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது
அதனையடுத்து, நேற்று (12) முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது கடந்த மாதம் இந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.by நிருபர் காவலன்
- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடுby நிருபர் காவலன்
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலிby நிருபர் காவலன்
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்by நிருபர் காவலன்











