Tag: அல்ஜசீரா
இஸ்ரேலிய தாக்குதலில் அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் பலி
இஸ்ரேலிய தாக்குதலில் அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் பலி
இஸ்ரேலிய தாக்குதலில் அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் பலி ,காசா நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் நான்கு பேர் பலி.
காசா நகரத்தின் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகரத்தின் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
காசா நகரத்தின் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட நான்கு அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக கத்தார் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு (GMT +3) சில நிமிடங்களுக்கு முன்பு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு
வெளியே ஊடக ஊழியர்களுக்கான கூடாரத்தில் பத்திரிகையாளர்கள் இருந்தனர், அதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
தொலைக்காட்சி சேனலின் கூற்றுப்படி
தொலைக்காட்சி சேனலின் கூற்றுப்படி, கடந்த நாளில் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 48 பாலஸ்தீனியர்களில் அதன் பத்திரிகையாளர்களும் அடங்குவர்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாலஸ்தீனப் பகுதி அங்கு கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை 230 ஐத் தாண்டியதாக பாலஸ்தீனப் பகுதி தெரிவித்துள்ளது. மேலும் 2023 அக்டோபரில் காசா மோதல்
அதிகரித்ததிலிருந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 61,430 ஆக உயர்ந்துள்ளதாகவும், 153,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் ஆகஸ்ட் 10 அன்று தெரிவித்துள்ளது.
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை ,காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் கடத்தல்
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும்,
128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குகரையில் ஏற்பட்ட மோதல்
அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.
அதேபோல், ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா
கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது.
இஸ்ரேலிலும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
Featured
இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி கொடுக்கும் அல்ஜசீரா
இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி கொடுக்கும் அல்ஜசீரா
இஸ்ரேல் தனது தேசிய பாதுகாப்பை உறுதி படுத்த தமது எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி
வருகிறது ,அதற்கு அவர்களு உரிமை உண்டு என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மேலு இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி
வருகிறது .மக்களை இழப்புக்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியது
இதனால சர்வதேச ஊடகங்களுக்கு கட்டு பாடுகள் விதித்துள்ளது ,மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த தொடர் போரை தடுக்கவில்லை ,வேடிக்கை பார்க்கிறது
இஸ்ரேல் புரியும் மனித குலத்துக்கு எதிரான கொலை வெறி தாக்குதல்களை பிபிசி ,சீ சீ என்
போன்றவை நிறுத்தியுள்ள நிலையில் ,அல்ஜசீரா தொடர்ந்து நேரலை செய்து வருவது இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி வழங்கியுள்ளது எனலாம்



















