திருகோணமலையில் பதற்றம்
திருகோணமலை நகரின் துறைமுக வீதியில் இ.போ.ச பேரூந்து மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
விபத்து நடந்ததையடுத்து, அப்பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள் பேரூந்தை தாக்கி சேதப்படுத்தினர்.
திருகோணமலையில் பதற்றம்
பேருந்திற்கு தீ வைக்க முயற்சித்ததையடுத்து, அங்கு வந்த பொலிஸார் குழுவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை











