வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு
இன்று (05) காலை வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு
காயமடைந்தவர் உடுகம்பொல, மாதல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி







