75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
75 கால இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்திய அரசு சரியான முடிவொன்றை எடுத்து இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க
வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில், யாழ்ப்பாண இந்திய துணை துாரகத்தின் பொறுப்பதிகாரியிடம் அந்த கடிதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
75 கால இனப்பிரச்சினை தீர்வு, ஒற்றை ஆட்சிக்கு பொருத்தமானது அல்ல, அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என அக்கடித்தில் வலுயுறுத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன் தெரிவித்துள்ளார்











