பள்ளத்தில் பாய்ந்த வான் – சாரதி தப்பி ஓட்டம்

Spread the love

பள்ளத்தில் பாய்ந்த வான் – சாரதி தப்பி ஓட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் நேற்று

(03) மாலை 5 மணி அளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் குறித்த வேனினை செலுத்திய சாரதி தலைமறைவாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேன் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வேனினை தாழ்பால் இட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுமார் 1 மணித்தியாலம் வரை எந்தவித தகவலும் வழங்காமையினால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

வேன் சாரதி போதையில் வாகனம் செலுத்தினாரா? அல்லது சட்ட விரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவா?

அல்லது வேறு ஏதும் காரணங்களினால் தலைமறைவாகினாரா? போன்று பல்வேறு சந்தேகங்களை பொலிஸாருக்கு ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த வேன் விபத்து இடம்பெற்றது, தொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வேனில் காணப்படும் வாகன அனுமதி

பத்திரத்தனையும், பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

பள்ளத்தில் பாய்ந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *