கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

Spread the love

கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

கொழும்பிலிருந்து பதுளைக்கு, இன்று முதல் சொகுசு ரயில், சேவையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து பதுளைக்கு, வார இறுதியில் சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்தும் ,போக்குவரத்து அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும்.

கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 07.20 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை,
எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *