ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கிய உக்கிரேன்
ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வரும்
நிலையில், உக்ரைனில் வசிக்கும் ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்
உக்ரைன் நாடாளுமன்றம்
உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா
நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை
அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகிறது.
ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.






