காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை
காக்கை தீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி
மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை, இதனை ஆராய்ந்து தனக்கு
அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய (06) தினம் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை மின்விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.






