தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

Spread the love

தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

வாழ்க்கை சுமைக்காக அரச ஊழியர்களை போன்று தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் ஒரே மாதிரியாக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் தனியார் துறைக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு அவசியம் கிடைக்க வேண்டும் என்று நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், இந்த விடயம் தொடர்பிலான முதலாவது சுற்று பேச்சுவார்த்தை இம்மாதம் 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனியார் துறையில் ஆடை தொழில்துறை, பெருந்தோட்ட தொழில்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை நேரடியாக மற்றும் அலுவலக சேவை சட்டத்தில் உள்வாங்கும்

நிறுவனங்கள் அடங்கலாக அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார்களை அழைத்து அவர்களுடன் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும்

நட்புறவுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *