இலங்கையில் வெள்ளம் – இருவர் மரணம் -314 வீடுகள் சேதம்

Spread the love

இலங்கையில் வெள்ளம் – இருவர் மரணம் -314 வீடுகள் சேதம்

இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.

பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்களில்;, 6 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

6 மாவட்டங்களில்இ ஆயிரத்து 273 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

. முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (31) மாலை தெரிவித்தது.

இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 334 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


நாளைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *