வறிய மக்களுக்கு ஆடுகள் வழங்கிய கனடா தமிழர்கள்
கனடாவில் வாழ்ந்து அமரத்துவம் அடைந்த மரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “கனடா வாழவைப்போம்” அமைப்பினால் வாதரவத்தை
அக்காச்சி குடியிருப்பில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் ஆடு
வளர்ப்பிற்காக ஆடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுரேன் கௌரவ உபதவிசாளர் மு.கயன் அதிபர்களான திரு பத்மதாசன் , திரு கோகுலன்
மற்றும் வட்டார கௌரவ உறுப்பினர் இரத்தினசிங்கம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்
கௌரவ உறுப்பினர் ரமேஷ் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன










