யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்

Spread the love

யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்

மிருசுவில் – தவசிக்குளம் பகுதியில், நேற்று (26) இரவு, வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி

புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில், 69 வயதான கணவனும் 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.

அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *