ஐநாவின் கேள்விக்கு இன்று இலங்கை பதில்

Spread the love

ஐநாவின் கேள்விக்கு இன்று இலங்கை பதில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ‘நில-இயல்’ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது.

எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களும் நிறுவனங்களும் முன்வைத்துள்ள சுமார் 90 அறிக்கைகள் குறித்து இந்த பேரவைகள் கலந்துரையாடப்படும்.

30க்கும் மேற்பட்ட விவாதங்களும் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்சிலட் பேரவையின் முதலாவது தினமான நேற்று தனது வருடாந்த அறிக்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விடயங்களை முன்வைத்தார்.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவர் முன்வைத்த விடயங்கள் விசேட கவனத்தை ஈர்த்தது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 எல்ரிரிஈ முன்னாள் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதை அவர் பாராட்டினார். ஜனாதிபதி சிவில்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *