விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது

Spread the love

விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண், ஆட்டோ சாரதி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான

தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 35 வயதான குறித்த சந்தேகநபர், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *