ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?
இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பது வருட உள் நாட்டு போர் ,தமிழீழ விடுதலை புலிகளின்
அழிவின் பின்னர் முற்றாக நீக்க பட்டது ,அதன் பின்னர் இலங்கை முழுவதும் சிங்கள பவுத்த பேரினவாத ஆக்கிரப்பின் கீழ் சூறையாட பட்டுள்ளது
பலிகளை அழித்து வெற்றி கண்டோம் என இலங்கை ஆளும் கோட்டா ,மகிந்த ஆட்சியில் ஆரவாரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வாறான நிலையில் புலிகளை அழித்திட முன் நின்று உதவியது சோனியா காங்கிரஸ் ஆட்சி ,அதன் பரிபூரண உதவி வழங்கல் என்பது அதே இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
இலங்கைக்குள் சீனா முழுமையாக நுளைந்து வேகமாக தனது கட்டுமானங்களை அது புரிந்து வருகிறது ,இந்தியா ,அமெரிக்காவில் தமக்கு பெரும் ஆபத்து உள்ளது என்பதை கருத்தில்
கொள்ளும் இலங்கை தமது தேசிய பாதுகாப்பிற்கு என புதுவகையான ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சித்து வருகிறது
அதற்கு அமைவாக இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் ஏவிய ரொக்கட் தாக்குதலை அடுத்து ,அவர்களது அந்த ரொக்கட் தயாரிப்பு தொழில் நுட்பங்களை பயன் படுத்தி ஏவுகணை தயரிப்பில் ஈடுபட கோட்டபாய தீவிர கவனம் செலுத்தி வருகிறார்
இதற்கு அமைவாகவே பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கோட்டா காண்பித்து வருகிறார் ,
ஒரு நாட்டின் ஆதரவை பெற துடிக்கும் கமாஸ் இலங்கைக்கு தாம் பயன் படுத்தும் ஏவுகணை
தயாரிப்பு விடயங்களை பகிர்ந்து ,தென் ஆசியாவில் இலங்கையும் ரொக்கட் பலம் கொண்ட நாடக மாற்றம் பெற உதவுமா என்பதே இன்றைய கேள்வியா உள்ளது
இலங்கை மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை இஸ்ரேல் மொசாட் மோப்பம் பிடித்து கொள்ளாதா என்பது வேறு விடயம்
ஆக இந்தியாவுடன் போட்டிக்கு தயராக ,சீனா இலங்கையை பின்புலத்தில் தூண்டி விடுகிறது ,மேலும் செய்மதிகளை விண்ணுக்கும் அனுப்பும் முயற்சியில் சீனாவுடன் இணைந்து இலங்கையில் செயல் படவுள்ளது
இலங்கை ஏவுகணை தொழில் நுட்பத்துடன் கூடிய பலம் பொருந்திய நாடாக தன்னை காட்டி கொள்ள
கோட்டா எடுக்கும் இந்த விடயங்கள் இலங்கையை பேராபத்தில் சிக்க வைக்குமா ..? அல்லது அதில் வெற்றி கொண்டு நிமிருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
- வன்னி மைந்தன் –
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்











