இஸ்ரேலின் ஆறு விமான தளங்கள் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – விமானங்கள் சேதம்

Spread the love

இஸ்ரேலின் ஆறு விமான தளங்கள் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – விமானங்கள் சேதம்

இஸ்ரேல் இராணுவம் ,பாலஸ்தீனம் மேற்குகரை ,மற்றும் காசா முனைகளை இலக்கு வைத்து நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

தொடர்ந்து மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,ஆனால் கமாஸ் போராளிகள் அமைப்போ இஸ்ரேலின் முக்கிய இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்

இன்று புதன்கிழமை ஆறு இஸ்ரேலிய விமான தளங்கள் இலக்கு வைத்து தாக்க பட்டுள்ளன Hatzor, Hatzerim, Nevatim, Tel Nof, Palmachim and Ramon ஆகிய விமான நிலையங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன

கமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,ஆனால் இஸ்ரேலின் வான் மறிப்பு ஏவுகணை செயல் இழந்துள்ளது ,இவர்கள் விமான தடுப்பு ஏவுகணை

கணணிக்குள் நுழைந்து வைரஸ் தாக்குதல் நடத்தி செயல் இழக்க வைத்த பின்னர் கமாஸ் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தி கைக்கிங் செய்த பின்னர் ரொக்கட் தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலிய தொழில் நுட்ப பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்

அதனை இராணுவ மையம் ஒப்பு கொண்டுள்ளது ,சில கோடிங் அதில் இருந்து அகற்ற பட்ட பின்னர் செயல் பாட்டுக்கு விடப் பட்டுள்ளது என்கிறது ,உலகில் சைபர் தாக்குதலில் முதன்மை பெற்றது

இஸ்ரல் ஆகும் ,அவ்வாறான இஸ்ரேலுக்கு கமாஸ் ,ஈரான் உதவியுடன் சைபர் தாக்குதலை நடத்தி தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இங்கு பல டசின் போர் விமானங்கள் அழிந்துள்ளதாக கமாஸ் தெரிவித்துள்ளது ,எனினும் இஸ்ரேல் இதுவரை எவ்வித தகவல்களையும் ,வெளியிடவில்லை மக்களோ பெரும் புகை மூட்டம் காண படுவதாக சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்

இஸ்ரேல் பெரும் இழப்பை இம்முறை சந்தித்துள்ளது ,தமது இராணுவ பாதுகாப்பு உள் கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது
இதில் இம்முறை கமாஸ் பலத்த வெற்றியை பெற்றுள்ளது

அடிமேல் அடி என்பது இதைத்தான் .இஸ்ரேல் இப்பொழுது திணறி வருகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *