குருதிஸ் போராளிகள் மீது -ஈராக் துருக்கி கூட்டு தாக்குதல் – அழிக்க படும் புலிகள் அமைப்பு

Spread the love

குருதிஸ் போராளிகள் மீது -ஈராக் துருக்கி கூட்டு தாக்குதல் – அழிக்க படும் புலிகள் அமைப்பு

ஈராக்கின் வடக்கு பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள் மீது துருக்கி மற்றும்

ஈராக் இணைந்து பெரும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி அமைப்பானது

ஈராக்,ஈரான்,துருக்கி ,சிரியா போன்ற நான்கு நாடுகளுடன் போரிட்டவாறு தமது தாயக மீட்புக்கு போராடிய வண்ணம் உள்ளது

அமெரிக்காவின் ஆதரவு பெற்று பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்த பொழுதும் ,இவர்களினால் தமது தேசிய நாட்டை கட்டி எழுப்ப முடியவில்லை

பிரிந்து செல்லும் வாக்கெடுப்பை நடத்த முற்பட்ட பொழுதே அவர்கள் மீள் பிடித்திருந்த அனைத்து

பகுதிகளையும் ஈரான் நுழைந்து தாக்கி அவற்றை அபகரித்து கொண்ட நிலையில் இப்பொழுது நான்கு நாடுகளின் வேட்டையில் நரபலியாகிய வண்ணம் உள்ளது ,

தமிழீழ விடுதலை புலிகள் எவ்வாறு துடைத்து அழிக்க பட்டார்களோ அதுபோன்ற அழிவின்

விளிம்பில் இப்பொழுது குருதீஸ் போராளிகள் உள்ளமை துயர் தோய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

இந்த மிக பெரும் வரலாற்று நெருக்கடியில் இருந்து தமது அமைப்பை தக்க வைத்தவாறு எவ்வாறு நகர்ந்து செல்ல போகின்றனர் என்பதே இன்றுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்

  • வன்னி மைந்தன் –
குருதிஸ் போராளிகள்
குருதிஸ் போராளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *