காதல் வந்தது எப்படி

Spread the love

காதல் வந்தது எப்படி

நான் நடந்த வீதியில
நீ வந்த வேளையில
நான் தொலைந்து போனேனே
நாயகியை நினைந்தேனே

நீ பேசும் போதெல்லாம்
நித்தம் நான் இரசிக்கிறேன்
நிகழ் காலம் உன் மடியில்
நீண்டுறங்க துடிக்கிறேன்

நாளை என்ற நாளதனை
நான் எண்ண மறுக்கிறேன்
நாடி வந்து உன்னடியில்
நான் கூட துடிக்கிறேன்

சிரிப்பாலே கதை பேசி
சிறை வைத்து போபவளே
என்ன உந்தன் மந்திரமோ
என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-02-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் வந்தது எப்படி
காதல் வந்தது எப்படி

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *