சொல்லிவிடு இதுவா காரணம்

Spread the love

சொல்லிவிடு இதுவா காரணம்

முதன் முதலாய் உன் வீடு
முன் பாதம் நான் பாதிக்க
ஓடி வந்து விழியாலே
ஒடிந்து விட அனைத்தவளே

காற்றில் இடையாட
கரைந்து போனேண்டி
மெல்ல நீ சிரிக்க
வீழ்ந்து இரசித்தேண்டி

உன் பார்வை ஏக்கம்
உள்ளத்தை தழுவ
கண்ணே உன் நினைப்பால்
கசங்கி போனேண்டி

விடை பெற முடியா
விட்டு நான் பிரிய
கலங்கிய விழி நீர்
கண்ணில் தெரியுதடி

நெஞ்சுக்குள் நேசத்தை
நெருக்கமாய் வைத்தவளே
கொஞ்சி பேச – உன்
கொள்கை மறுத்ததென்ன …?

பொல்லா சாதி
வேலியாய் நிற்க
நம்ப மறுத்தாயோ
நாராய் கிழிந்தாயோ …?

ஆதியில் இல்லை சாதியடி
அவனில் இல்லை பிளவடி
பிந்திய மனிதர் கேடாச்சு
பிரளய சாதி செய்தாச்சு

ஒத்தையில நான் தவிக்க
ஓரமா விட்டவளே
தவறான முடிவொன்றால்
தவறிடிச்சே நல் வாழ்வு ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *