வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை
மினுவாங்கொடை பிரதேசத்தில் கொவிட் 19 நோய்த் தொற்று பரவலை
அடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மகாநாடு, உரைகள்,
கண்காட்சி இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், ஊர்வலங்கள்,
பெரகர வீதி உலா மற்றும் அத்தியாவசியமல்லாத கூட்டங்கள் போன்றவற்றை
நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர்
நாயகத்தினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சுகாதார அமைச்சின் இணையத்தளத்தை
பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






