இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் (6 ஆம் திகதி) இரவு 9.40 மணியளவில் திவுலுப்பிட்டிய
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவர்கள் அனைவரும்
மினுவங்கொடை தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். என்றும்
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






