அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும்
நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை உயர்ந்த பட்ச நிர்ணய விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்படா
விட்டால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தேங்காயின் சுற்று வட்டத்திற்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி
வெளியிடப்பட்டதன் பின்னர், இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை
எடுக்கப்பட்டதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்தார்.






