துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் தாயகம் வருகை
துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் நேற்றையதினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு
சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர்
தனிமைப்படுத்தலுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.






