இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா

Spread the love

இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா

இளைய தலைமுறையினர் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய காலம் எழுந்துள்ளமையால், இளைய புத்திசாலித்தனம் மிகுந்த

உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (2020.08.01) பிற்பகல் காலி மாவட்டம் ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது உரையாற்றிய பிரதமர்,

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இளைய தலைமுறையினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர் சமுதாயத்தினர் இம்முறை பொதுத் தேர்தலில் சரியான தெரிவொன்றை

மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் இன்போது மேலும் தெரிவித்தார்.

இரண்டாக பிளவடைந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பி அபிவிருத்தியை நோக்கிய திட்டமிட்டலுடன் கூடிய பயணத்தை

முன்னெடுத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்குமாறும் பிரதமர் இளைய சமுதாயத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *