வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை இராணும்

Spread the love

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை இராணும்

அடுத்த வருடம் தொடக்கம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வருடாந்தம் பெரும் தொகை பணத்தை செலுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி

அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக 1340 ரூபா செலுத்த வேண்டும். இதேபோன்று 2009 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு

வழங்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகையிலான பணம் வெளிநாட்டை சென்றடைந்தது.

தொடர்ச்சியாக இந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தம் நீடிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஒப்பந்தத்திற்கு அமைய அதனை முடிவிற்கு கொண்டு

வராமையினால் இந்த நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் நேற்றைய தினம்

விசேட பேச்சுவார்த்தை ஒன்று போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர

சில்வா, அமைச்சின் செயலாளார் காமினி செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *