பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை
பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒருங்கிணைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது
2026 ஜூன் 29-30 தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு குறித்த ஏழாவது உலகளாவிய மாநாட்டில் ஆற்றிய தனது உரையில்,
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர்
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகோடி, பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
“பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் 2030 செயல்திட்டத்திற்கு மீண்டும் உறுதிபூணுதல்: அமைதி, ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மீட்டெடுத்தல்” என்ற தலைப்பிலான உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர்,
காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலங்கையின் ஒருங்கிணைந்த கொள்கை அணுகுமுறையை வலியுறுத்தினார்.
நிலையான போக்குவரத்து
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கம், நிலையான போக்குவரத்து அமைப்புகள், வட்டப் பொருளாதார அபிவிருத்தி, சூழலமைப் புனரமைப்பு
மற்றும் காலநிலை மீள்திறன் உள்ளிட்ட இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவிலான பங்களிப்பின் கீழ் உள்ள தேசிய முன்னுரிமைகளை அவர்
கோடிட்டுக் காட்டினார். மேலும், வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதியுதவி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை அதிகரிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.






