உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி ,அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய உரச் செயலகம் விளக்கமளித்துள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அலுவலகம், குறித்த கூற்றில் உள்ள சில விடயங்கள் உண்மையானவை அல்ல என வலியுறுத்தியுள்ளது.
800 அமெரிக்க டொலர்
கஜகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு உரத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும், 800 அமெரிக்க டொலர்
விலையில் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்நாட்டிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை 220 முதல் 320 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், 800 டொலர் போன்ற அதிக விலைக்கு உரத்தை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள தேசிய உரச் செயலகம், அந்நாட்டிலிருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு விடுக்கப்பட்ட
கோரிக்கைகளுக்கு தாம் தாமதமின்றி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், இதுவரையில் அந்த நிறுவனங்கள் கஜகஸ்தானில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என அந்த செயலகம் சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல், ஏப்ரல் 29ஆம் திகதி ‘Ceylon Trading and Plantation (Pvt) Ltd’ எனும் நிறுவனம் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்திற்கான கட்டளையைப்
யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை
பெற்றுள்ளது. எவ்வாறாயினும், அந்த நிறுவனமும் இதுவரை யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என தேசிய உரம் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதத்தில் இந்தியாவும் ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 900 அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளதாகவும் அந்த செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை








