மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல்

மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல்
Spread the love

மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல்

மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல் ,மின்சார வாகனப் பயனாளர்கள் பகல் நேரத்தில் தங்கள் வாகனங்களை மின்னேற்றம் செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கை

மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, மின்சார வாகனப் பயனாளர்கள் பகல் நேரத்தில் தங்கள் வாகனங்களை

மின்னேற்றம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வலியுறுத்தினார்.

முன்பை விட மாலை 6 மணிக்குப் பிறகு மின்சாரத்திற்கான தேவை 300 மெகாவாட் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

மின்சார வாகனப் பயனாளர்கள்

மின்சார வாகனப் பயனாளர்கள் பணியிலிருந்து வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் தங்கள் வாகனங்களை மின்னேற்றம் செய்வதாகவும், இந்த

அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து மின் நிலையங்களையும் இயக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“பகல் நேரத்தில் நம்மிடம் மின்சார உபரி உள்ளது. எனவே, மின்சார வாகனப் பயனாளர்கள் பகல் நேரத்தில் தங்கள் வாகனங்களை மின்னேற்றம் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.