ஆட்டோ சாரதியை கொன்று பணத்தை கொள்ளையடித்த கும்பல்
ஏக்கல பகுதியில் இருந்து குறித்த முச்சக்கரவண்டியில் வாடகைக்கு சென்றுள்ள சந்தேகநபர்கள் பாழடைந்த
இடமொன்றில் வைத்து சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி ஜா-எல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக
சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






