விபத்தில் ஒருவர் மரணம்
விபத்தில் ஒருவர் மரணம் ,கொழும்பு வீதி புனாணை பகுதியில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வியாபார நடவடிக்கைக்காக
வியாபார நடவடிக்கைக்காக சென்ற பட்டா ரக வாகனம் ஓட்ட மாவடி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் பட்டா ரக வாகனத்தில் மோதி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
விபத்து தொடர்பான மேலதிக விசாரணை
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







