உரிமங்கள் இல்லாத 2வாகனங்கள் சிக்கின
உரிமங்கள் இல்லாத 2வாகனங்கள் சிக்கின ,உரிமங்கள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களுடன் இரண்டு
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்

சந்தேக நபர்களை கைது செய்வதில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, மெனிக்ஹின்ன காவல் பிரிவு மற்றும் வத்தேகம காவல் பிரிவில் 13.09.2025 அன்று காலை இரண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி
உரிமங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 மற்றும் 58 வயதுடைய மெனிக்ஹின்ன மற்றும் வத்தேகம பகுதிகளில் வசிப்பவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 13.09.2025 அன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15.09.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.






