உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள் நிலவரத்தால் பயணிகள் பெரும் அச்ச நிலையில் உறைந்துள்ளனர். Sri Lankan buses are life-giving
பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து Public passenger transport bus
இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மக்கள் உயிர் குடிக்கும் எமனாக மாறியிருக்கிறது .
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வரும் பேருந்து விபத்துக்களினால் மக்கள் பலியாகி வருகின்றார்கள் .
தொடரும் இந்த பேருந்து விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை இலங்கை காவல்துறை எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறது .
தொடரும் பேருந்து விபத்துக்கள் Bus accidents continue
இடைவிடாது தொடரும் பேருந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான அடிப்படை காரணம் என்ன.
என்பதை கூட ஆராய்ந்து விளக்க முடியாத நிலையில் இலங்கை காவல்துறை சிக்கி இருக்கிறது.
பயணிகளை ஏற்றியபடி வேகமாக பயணிக்கும் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என்பன போட்டி போட்டு வீதியில் ஓட்ட போட்டி நடத்துகிறது .
இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அவர்கள் வியாபார போட்டியில் சிக்கி பலியாகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அரச நிர்வாகமும் அதன் இயக்கமும் தான் காரணமென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.







